வீதியில் விழுந்த விதைகளுக்காக

வீதியில் விழுந்த விதைகளே . . .

                 விழித்தெழுங்கள் விடியலை நோக்கி.

கடவுள் காத்த கலைமான்களே . . . 

                   காலடியிடுங்கள் கழித்த காலனை.

பாரினில் பாதம் பதித்த பதங்களே . . .

                  பண்டிலனாகுங்கள் பாவக்கீற்றினை போக்க.

மனித மாண்பின் மாணிக்கங்களே . . .

                  மறந்திடுங்கள் மாய மோகத்தினை.

கல்வி கற்க கனிந்தவர்களே . . .

                   காத்திடுங்கள் கற்கும் நூலினை.

நல்லதோர் நம்பிக்கையின் நாயகர்களே . . . 

                    நலங்கெடாதீர்கள் நலிந்த நிலையிலும்.

அச்சத்தை அல்லியாக்கும் அற்புதங்களே . . . 

                   அரசாளுங்கள் அருட்கறம் பிடிக்கின்றோம்.

சவால்களை சந்திக்கும் சாதனையாளர்களே . . . 

                   சத்தமிடாதீர்கள் சாதனை புரிந்தபோதிலும்.

தரணியை தாங்கும் தந்தங்களே . . .

                   தாழ்ந்துவிடாதீர்கள் தடைகள் தவிடாகும் வரை .

முயற்சியோடு நல்ல கல்வியும் , பண்போடு நல்ல அன்பையும்  கொண்டால் ,

வெற்றியோடு நல்ல செல்வமும் ,மாண்போடு நல்ல பாசமும் - கரம் வந்து சேருமே . . .

எழுதியவர் : திலீபன் சுந்தர் (27-Mar-15, 10:24 am)
பார்வை : 375

மேலே