கனவைத் திருடியது குற்றமே - தேன்மொழியன்

கனவைத் திருடியது குற்றமே
~~~~~~~~~~~~~~~~~~~~~

வானில் பறந்து திரிந்தே
முள் ஒன்றை
மிரட்டுகிறேன் - உன்
காலணியில் நுழைந்தது குற்றமே ..!!

சாரலோடு சண்டையிட்டே
தூரல் ஒன்றை
துரத்துகிறேன் - உன்
துப்பட்டா நனைத்தது குற்றமே ..!!

தோட்டத்தில் பூத்து மலர்ந்தே
தேனீ ஒன்றை
திட்டுகிறேன் - உன்
கழுத்தைக் கடித்தது குற்றமே ..!!

மேசை மேல் கைவைத்தே
புத்தகம் ஒன்றை
கிழிக்கிறேன் - உன்
மடியில் அமர்ந்தது குற்றமே ..!!

வீட்டில் ஒளிந்து மறைந்தே
கண்ணாடி ஒன்றை
உடைக்கிறேன் - உன்
அழகை ரசித்தது குற்றமே ..!!

படுக்கையில் சரிந்து விழுந்தே
போர்வை ஒன்றை
எரிக்கிறேன் - உன்
தேகம் தொட்டது குற்றமே ..!!

இரவில் உறங்கி மயங்கியே
கற்பனை ஒன்றை
கலைக்கிறேன் - உன்
கனவைத் திருடியது குற்றமே ..!!

-- தேன்மொழியன்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (7-Apr-15, 6:37 pm)
பார்வை : 141

மேலே