ஒரு கவிதை எழுதுகிறேன்

வார்த்தைகள் தெரியாமல்
கவிதை எழுதுகிறேன்
உன் பெயரை மட்டும்
உச்சரித்துக்கொண்டு
உவமைகள் இல்லாமல்
அழகு சேர்கிறேன்
உன் பெயரோடு
என் பெயரையும்
சேர்த்துக் கொண்டு
நான் கண்ணதாசன் பேரனும் அல்ல
கம்பன் வழி வந்த வாரிசும் அல்ல
இவர்களின் ரசிகனும் அல்ல
கவிஞனும் அல்ல
கவிதைப் பிரியனும் அல்ல

இலக்கியம் தெரியாது
இலக்கணங்கள் புரியாது
இருந்தும் ஒரு கவிதை
எழுதுகிறேன்
வார்த்தைகள் தெரியாமல்
மொழிகள் அறியாமல்
கொஞ்சமேனும் அழகு குறையாமல்
மனதுக்குள் கொட்டிக் கிடக்கும்
உன் நினைவுகளை வார்த்து
தேகம் முழுக்க உலாவும்
காதலை சேர்த்து
மௌனம் காத்து
காகிதம் நிரம்ப
பேனா மை குறைய
ஒரு கவிதை எழுதுகிறேன்
உன் பெயரை மட்டும்
உச்சரித்துக் கொண்டு
உன் பெயரோடு என் பெயரையும்
சேர்த்துக் கொண்டு .




காதலோடு
"ஏனோக் நெஹும்"

எழுதியவர் : ஏனோக் நெஹும் (8-Apr-15, 1:29 pm)
பார்வை : 950

மேலே