பாடல்
F : மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சேவி
நடந்த இளம் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
M : F : மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சேவி
நடந்த இளம் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
யானை படை கொண்டு சேனை பல வென்று
ஆள பிறந்தாயடா… புவி ஆள பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழ பிறந்தாயடா…. வாழ பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு……..
இளமை வழி கண்டு………
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழ பிறந்தாயடா……..
F : தங்க கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார்….. பொருள் தந்து
மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்…. உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
மாமன் தங்கை மகளான…….
மங்கை உனக்காக…..
உலகை விலை பேசுவார்…….
M : நதியில் விளையாடி கொடியின் தலை சேவி
நடந்த இளம் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே