வலியே வலியே

வலிகள்
எனும்
விழிகளைத்
திறந்து
மனமே
தீப்பற்றி
எரிகிறதே ~
மடி
நனைத்த
துளி
உவர் நீரும்
கடலலை
வேகம் தானே
நினைவுகளை
அள்ளி
கண்
மையினை
கரை ஒதுக்கி -தான்
தொலைத்த
விண்மீனை
கடற்கரையில்
தேடுகிறதே ~
தென்றலே
வீசாது
நின்று விடு
உன்
உரசலில்
மூழ்கும்
இலை நுனி
எனை
தீண்டி
என்
அழ(ழு)கை
பார்க்கின்றது ~
உனக்காக
காத்து
நா அறையும்
மண்படையாய்
மாறி
உள்ளத்தினை
அரிக்கின்றதே
நினைவுகள்
எனும்
புழுக்களை
உணவாக
திண்று ~
இதம்
தரும்
தனிமையும்
அகதியாய்
எனை
அடைந்து
தன்
உறக்கம்
தொலைத்து
உனைத்
தேட
கவிதையாய்
உருவெடுத்து
கனவுகளில்
இதழ்
தடவி
அமைதியை
ஆள்கிறது
இரவு
எனும்
கோரப்பிடியில் -என்
மனதை
சிறைபிடித்து
அரிவாள்
முனையால்
இதயத்தை
அறுவடை
செய்து
அகம்
மகிழ்கிறது -என்
முகம்
பாரது ~~~~~~~~~