பசுமையின் பெருவாழ்வை

கனவுகளில் நீண்டிருந்தது ஓர் அடர்வனம்.
செடிகளும் மரங்களும் காற்றோடு
கதைத்துக் கொண்டிருக்கவேண்டும்
சில இனமறியாத பூச்சிகளும்
பூக்களுக்கிடையிடையில் நகர்வதும் மறைவதுமாய்
சில்லெனக் கண்ணிறைத்த தடாகப் பின்னணியில்
பசுமையின் தீராப் பரிணாமச் சிலிரிப்பையள்ளி
ஆச்சர்யங்களுக்குள் விரிக்கத் தொடங்கையில்
ஓங்கி அடிதத்ததில் இரத்தம் தெறித்த கொசுவின்
வாழ்வடங்கலில் திடுக்கிட்டு இழக்கிறேன்
மீண்டுமினியில்லாதே போனதொரு பசுமையின் பெருவாழ்வை

எழுதியவர் : சர் நா (16-Apr-15, 5:48 pm)
பார்வை : 154

மேலே