நங்கையிற் சிறந்தவள்

பூக்களின் தேவதையே!
பூவின் முதல்இதழே
பட்டாம்பூச்சிக்கு றெக்கை
கடன்கொடுத்தவளே
நின்அழகே உச்சமென்றால்
உன்தாயின் கருவறை என்னென்பேன்
தீயில் விழுந்தெழுந்து
தென்றல் காற்றில் தேய்த்துக்கொண்டு
நதியில் குளித்தவளோ
நீ நங்கையிற் சிறந்தவளோ
உலகம் முழுவதிலும் உள்ள
உயிர்கள் நோக்குகின்றேன்
உன்னைத்தானே நான்
அழகின்தலைவி என்கின்றேன்
புடவை அணியாதே
என்புலமை தோற்றுவிடும்
பாடத் தெரியாமல்
என்பேனா தலைகுனியும்
நின்அழகில் தோய்ந்ததனால்
கண்கள் ஓய்ந்ததனால்
கதிரவன் ஓய்வெடுக்கப் போகின்றான்
நீயும் விழிகள் துயிலாயோ
மூடிய இமைகளுக்குள்
இருண்ட நட்சத்திரம்
புதிதாய்க் கிடைக்கட்டுமே...

எழுதியவர் : தண்மதி (21-Apr-15, 10:14 am)
பார்வை : 64

மேலே