ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
![](https://eluthu.com/images/loading.gif)
மனிதன்
------------
கருவில் சதையாகி
தெருவில் ஊர்போயி
கல்லறையில் தூங்கும் மண்புழு
பயணம்
------------
1.கருவில் தவழ்ந்து
மண்ணில் நடந்து
மண்ணறையில் தூங்கும் வரை.....,
2.கருவிலிருந்து உலகிலும்
உலகிலிருந்து கல்லறைக்குமான
நடை பாதை.
சிகரெட்
-----------
தனக்குத்தானே
ஊதி ரசிக்கும் சாவுமணி
சிகரெட் புகை.
இணையம்
-----------------
தீயதை நல்லதாய்க்
காட்டும் கண்களின்
மாயாஜால வித்தை.
கவிஞன்
---------------
சாலையில் கிடக்கும்
கல்லைக்கூட வரியாக்கி
புகழாக்குபவன்.
கோபம்
-----------
வானமே ஏன்?
மூக்கு சுண்டுகிறாய்
சிவக்குது மேகங்கள்.
நிலை
---------
அந்தி சாய்ந்தால் நிலா
வரும்.பந்தி களைந்தால்
சேரிச்சிறுமி வருவாள்.
தாய்
-------
1.முளையூட்டி தோள்
சுமந்து வளர்த்தெடுத்த
கண்கண்ட தெய்வம்.
2.தாலாட்டுப்பாட்டால்
வாழ்க்கையில் பாசம்
கற்றுத்தந்த முதல் ஆசான்.
3.கோயில் கட்டி
பூஜை செய்யப்படாத
கடவுள்.
கைக்குட்டை
-------------------
செல்வன் வியர்வை
துடைப்பதற்காக தயாரிக்கப்பட்ட
கைக்குட்டை ஏழை...,
செல்பேசி
--------------
பிறந்த திகதியும்
இறந்த திகதியும் வேற்றான்
அறியும் முதல் உத்தி.
அவலம்
-------------
மந்திரி வீட்டு நாய்க்கு
லண்டன் பிஸ்கட்டு
ஏழைக்கு பழைய சோறு.
ஊனம்
----------
கடவுளால் எழுதப்பட்ட
விதிப்புத்தகத்தில் விடப்பட்ட
எழுத்துப்பிழை.
கானகம்
------------
அமைதிக்காக ஐந்தறிவு
புத்தி ஜீவிகள் அமைத்துக்
கொண்ட வாசல்.