நியங்களில் விவாதம்

மேகம்
உருகியூற்றும்
பொழுதொன்றில்
தேனீர்ச்சாலையின்
உட்புற கண்ணாடியில்
உன் பெயரை
வரைந்துவிட்டு
நகர்கிறேன்....

உன் பெயரை
கரைக்கும் என்
கண்ணீரை தேற்றும்
புரோட்டா மாஸ்ரரின்
கைத்திறன்
சப்தத்தை கேட்ட‌
மறுகணத்தில்...

என்னுள் மிதக்கும்
ஒருவன் ஓடிச்சென்று
எழுத தொடங்குகிறான்
அதே க‌டையில்
புரோட்டா மாஸ்ரரின்
உள்ளங்கை
காய்ப்புக்களை...

எவர்களினதோ
குழந்தை
பறித்துச்சென்று
கப்பலாக்கி விடுகிறது
உதடுகளை துடைக்கும்
தாளில் எழுதிய‌
கவிதையை...

கவிதை மூழ்க‌
என்னுள் ஒருவன்
வெளிநடப்பு புரிகிறான்!
அதே சப்தம்
இப்போது அவனை
தேற்றிக்கொள்கிறது..

நியங்கள் அடுத்த‌
மேகத்தில்..
கொத்து புரோட்டா
மாஸ்ரரின் கைத்திறன்
சப்தத்தோடு
விவாதிக்கலாம்
என்னையும்
உன்னையும் பற்றி...

மின்னல்களும்
இடிகளும்
இலவசம்
உன் மெளனத்தில்..

எழுதியவர் : புலவூரான் ரிஷி (30-Apr-15, 11:39 am)
பார்வை : 132

மேலே