வயோதிகம்
அனுபவங்கள்
எனும்
அற்புதங்களைச்
சுமந்து
காலத்தின்
சாட்சியாக
கண்முன்னே
மௌனமாக
அசைந்து
இயலாமைப்
பள்ளத்தாக்குகளைத்
தவிர்த்து
தெளிவாக
நகரும்
இம் முதிர் நதிகள்...
எங்கோ
தமக்காக
காத்திருக்கும்
கடலின்
சங்கமிப்புக்காக.
காலத்தின்
போக்கில்
இவை கடந்த
பாதைகளும்
சுவடுகளும்
நம் கண்களுக்குத்
தெரிவதில்லை
மாறாக....
அவை
எல்லாவற்றையுமே
தம்முள்
அடக்கி
ஒன்றுமே நடவா
மாயத்
தோற்றமளிக்கும்
அவர்களின்
அந்த வாழ்க்கைக்குள்
ஒளிந்து உறங்கிக்
கொண்டிருக்கின்றன
எத்தனையோ
தத்துவங்கள் ...
நன்றி முரளி சார் ...நீங்கள் எழுதிய வயோதிகம் என்ற படைப்பு இந்தக் கவிதைக்கும் கருப்பொருள் தந்தது...