எம்மவன்

வீடு கூட பெருக்கல‌
முற்றம் கூட தெளிக்கல‌
கையெல்லாம் நடுங்குது
காலெல்லாம் தள்ளாடுது
கண்ணுகூட மங்கலாகுது
கயிற்றுக்கட்டிலில் ஒடுங்கிட்டேன்
கடுதாசி ஒண்ணு வந்துருச்சி
முறுக்கிக்கிட்டு போன மவன்
குடும்பத்தோட வாரானாம்...
வீடெல்லாம் அழகாச்சி
வாசலெல்லாம் கோலமாச்சி
வாயெல்லாம் பல்லாச்சி
பட்சணங்கள் பலவாச்சி
பாசமுள்ள எம்மவன்.... எம்மவன்
என்னைப் பார்க்க வாரானாம்.....

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (4-May-15, 11:07 pm)
பார்வை : 194

மேலே