மௌனம் kalathi

அவனிடம் பல முறை தோற்றதுண்டு
அதில் துளியும் வருத்தமில்லை
அவன் மீது கோபம் வந்த போதேல்லாம்
என்னை நானே வெறுந்தேன்
அவன் கோபம் என் மேல் பாயும் போதேல்லாம்
அவன் கண்களை ரசித்திருக்கிறேன்
உண்மையிலும் உண்மையாய் நான்
நேசித்தது எல்லாம் அவன் இதயத்தை தான்
உறவு கலந்து மகிழ்ந்திட நான்
ஒரு போதும் நினைத்ததில்லை
அவன் உள்ளத்தில் என்
ஆயுளையும் தாண்டி வாழ்ந்திடவே
தவமிருந்தேன்