அகிம்சை

அகிம்சை -என்ற
சொல்லிற்கு 'வீரம்' வந்தது உன்னால்தான்!
உன் இரு பாதங்கள் பதிந்த இடமெல்லாம்
ஓராயிரம் பதங்கள் பின் தொடர்ந்தன..........

உன் பாதங்களின் அழுத்தம் சொல்லியது -
உன்
மன எழுச்சியின் வேகத்தினை....
'கதர் தரித்த 'காந்தி'யே - உன்
காகித எழுத்துகள் தான்
விடுதலையின் 'ஆயுத' எழுத்துகள்..............

சிறையில் நீ இருந்தபோதும் - உன்
சிந்தனை மட்டும் சிறகடித்து பறந்தது....
வெள்ளையனின் வெற்றிக்கொடி - உன்
அகிம்சை 'தீயால்' பற்றிகொண்டன - அதை
அவனால் அணைக்கமுடியவில்லை ..........
முடிவில் 'உன்னை' அணைத்துகொண்டான்...........

விடுதலை 'பூவை'
முள்கரங்களில் இருந்து - உன் வியர்வை
துளியால் வாடாமல் மீட்டு
எங்களிடம் தந்து விட்டாய்............

காந்தி மகானே,
நம்மை ஆண்டவர்கள் நாட்டிலும்
இன்று உன் சிந்தனை - ஆம்
'அகிம்சை ' ஒன்றும் சாதாரணம் அல்ல - அது
பல வரலாறுகளை மாற்றும் சக்தி வாய்ந்தது !

என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்

எழுதியவர் : (8-May-15, 10:28 am)
Tanglish : agimsai
பார்வை : 135

மேலே