கருமை

கருமையே - நீ
மட்டும் என் சோகத்தின்
சின்னமாய் சித்தரிக்க படுகின்றாய்!
நன் மட்டும் உன்னை சற்று
வேறுபடுத்த நினைக்கின்றேன்!
காற்றும்'கரிய' மேகத்தை
தீண்டும் போதுதான் மழை பொழிகின்றது!
நிலவும் 'காரிருளால்' ஒளி பெறுகின்றது!
கற்சிலையும் 'கருமை' யால்தான்
அருள் பெறுகின்றது!
பெண்ணின் கூந்தல் உன்னால் தான் சிறப்பு!
கண்ணின் கருவிழி உன்னால் தான் சிறப்பு !
சூரிய ஆற்றல் கவரபடுவது உன்னால்தான் ,
திராவிடன் என உணரபடுவது உன்னால்தான்................
கருமையே - என்
காலையின் முதல் உணவை
உன்னுகுதான் படைகின்றேன் ...........
என் ஒவ்வொரு இரவையும்
உன்னோடுதான் அனைகின்றேன்......................
என்றும் அன்புடன்
அ.மனிமுருகன்