மானம் கெட்டவர்க்கே மரியாதைஅதிகம் போட்டிக் கவிதை - ஆடு ஆடாத - கற்குவேல் பா

ஆடு - ஆடாத
~~~~~~~~~~~~~
கால் கடுக்க
தூரம் நடந்து
காடு கரை
ஏறி இறங்கி

ஆற்றுத் தண்ணி
அதற்கு காட்டி
மேய்த்த கிழவனுக்கு
மிஞ்சுறது புலுக்கையாம் ..!

* * *

வாங்கி சென்று
வயிறு முழுதும்
தண்ணீர் நிரப்பி
லாபம் பார்த்த

தரகனும் - ஊருக்குள்ள
கட்டிப் புட்டான்
ஏழு , நாலுமாடி
கார வீடு ..!

* * *

அவன்கிட்ட அதவாங்கி
ஆயிரமா கூறுபோட்டு
அண்டா கறி சமைச்சு
இலவசமா கொடுத்து

மானம் கெட்ட
ஓட்டு வாங்கி
ஜெயித்த மந்திரிக்கு
மாலையாம் மரியாதையாம் ..!

* * *

மானம் கெட்டவர்க்கே
மரியாதைஅதிகம்
மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்ச்செல்வம் குவியும்

-- கற்குவேல் .பா

( குறிப்பு * : படம் எந்த ஒரு தவறான நோக்கத்திலும் பதியப் படவில்லை . )

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (15-May-15, 9:43 am)
பார்வை : 1049

மேலே