என்னை பிடிக்குமா
உறக்கம் இல்லையடி உயிரே
என் இரவில் சூரியன் முளைக்குதடி !
கனவும் வரவில்லையடி உயிரே
பகல் தூக்கமும் பறிபோனதடி !
எனோ நீ வந்தால்
என்னை விட்டு பிரிகிறேன் !
எனோ நீ சென்றால்
வழியெங்கும் தேடி அலைகிறேன் !!!
அடி பெண்ணே பசி இருந்தும்
பத்தியம் இருக்கிறேன் !
உன்னை பார்க்கத்தானே பேசத்தானே தவிக்கிறேன் !
உனக்கு என்னென்ன பிடிக்குமோ யோசிக்கிறேன் !
என்னை பிடிக்குமா என்றே
முதல் கேள்வியாய் கேட்கிறேன் !
இனி எல்லாம் என்னுள் மாறுமே
என் உலகம் உனக்குள்
இடம் பெயருமே !!!
(கவி செந்தமிழ்)