உயிர்களின் வலி யாரே அறிவார்

இரண்டு பேரும் காதல்
வேண்டாம் என்றோம் !

என்ன சொல்லி என்ன
மனம் கேட்கவா போகிறது ?

யார் இருக்கிறார்
சொல்லி அழ ?

வானம் திறந்து கிடக்கிறது
வாசல் வேர்த்து பார்க்கிறது

இன்னொரு முறை
காலம் பின்னோக்கி நகராதா

அங்கு நீயும் நானும்
நிலவும் சூரியனாய் இருக்கலாமே

காலம் கல்லறை போல
மூடிவிட்டால் திறக்காது !

நான் இறைந்து கிடக்கிறேன்
அள்ளிச் செல்ல ஆள் இல்லா

நட்சத்திர சிதறலாய்
மனமென்னும் ஆகாய வீதியில் ..

எல்லொருக்கும் அவரவர்
வேலை இருக்கிறது .

இரண்டு உயிர்களின் வலி
யாரே அறிவார் ?

இறந்து போகக் கூட ஆசைதான்
என்ன செய்ய நினைவுகள் மறுக்கிறது

வாழ ஆசைப்பட்டால்
வாழ்க்கை துரத்துகிறது

இறைவன் மேல் கோபம் வருகிறது
எங்கு இருக்கிறான் சொல்லுங்களேன்

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (16-May-15, 12:06 pm)
பார்வை : 175

மேலே