நீ

ஓடி..ஓடி..
காதலித்தோம்..
ஊரே எதிர்த்த போதும்
உறுதியாய் இருந்தோம்..
பதிவு திருமணம்..
புதிய வாழ்க்கை...
ஒரு கூட்டு பறவையாய் உறவாடத் தொடங்கிய பின்
வலி சுமக்க வைக்கிறாய்..
வார்த்தைகளின் சாட்டையால்..
இழுத்து அனைத்து முத்தம் பதித்தாய் அன்று
அந்த களவாடிய பொழுதுகள்
காதலின் சம்மதம்..
இன்று நீ கணவன்..
நான் மனைவி..
அன்று சல்லாபித்தவன்
இன்று சந்தேக கோடு வரைகிறாய்
புரிந்துகொள்,
காலம் மாறிவிட்டது..
சீதைகள் சிந்தனை மாற்றினால்..
ராமர்கள் அக்கினிபிரவேசம் செய்ய வேண்டியது வரும்,
புரிந்து கொண்டேன்
காதலிக்கத் தெரிந்த உனக்கு,
காதலைத் தெரியவில்லை...
துறைமுகம் தெரியாமல்
தோணிக்குள் அமர்ந்து விட்டேன்..
இனி..
என்பயணம் என் பாதையில்..
நீ...?

எழுதியவர் : ந. ஜெயபாலன், திருநெல்வேலி (18-May-15, 11:29 pm)
Tanglish : nee
பார்வை : 99

மேலே