கிழட்டுப் பருவம் - Mano Red

முதுமையின்
பருவ வயது அது..!!
இரண்டு மனைவிகள்
தவறியிருந்தாலும்,
மூன்றாவது காலின்
முக்கிய துணை(வி)யுடன்
தவறாமல் இருப்பவர்..!!

ஒரு குரல் கேட்டு
ஓடி ஓடி வேலை செயதவர்கள்
அவர் முதுமையின் தொல்லையால்
எங்கோ ஓடிவிட்டனர்..!!
இப்போது அவரின்
காது கூட எதுவுமே கேட்பதில்லை..!!

நாட்டு நடப்புகளை
தினசரியில் தினசரி
மேயந்தவருக்கு,
நரை வந்து
நடை தளர்ந்து
நடப்பதற்கு முடியாத போது
செய்தி சொல்ல ஆளில்லை..!!

தரையில் எதையோ
தடவிக் கொண்டிருந்தார்..!!
கண்ணாடியால் பதித்த
அத்தனை பெரிய வீட்டில்
கீழே விழுந்த
மூக்கு கண்ணாடியை
எடுத்து தர ஆளில்லை..!!

பிள்ளை இல்லாத
வீடுதான் என்றாலும்
அக்கிழவனால் துள்ளியாட
இயலவில்லை..!!
அகல தூண்களுடன் சேர்த்து
அத்தனை பேரும் அவரை
தவிக்க விட்டு போன பின்
எப்படி ஆடுவார்..??

முதியவர்கள் மிகவும்
இனிமையாய்
இருப்பதாலென்னவோ
முதுமையில்
சர்க்கரை சேர்ந்து விடுகிறது,
இளமையின் கசப்பான உள்ளங்களுக்கு
அம்முதுமையின் இனிமை
எப்படி இனிக்கும்..??

பல்லை கடித்துக் கொண்டு
சாகத் துணிந்தவருக்கு,
சேவல் கத்தலும்,
ஆடு மாடுகளின் அலறலும்
பசியை சொல்லியது..!!
அவருக்காக அத்தனை உயிர்
இருக்கும் போது
அவர் ஏன் இனிமேல்
உயிரை விடப் போகிறார்..??

எழுதியவர் : மனோ ரெட் (19-May-15, 9:29 am)
பார்வை : 129

மேலே