கனவு பெண்

நிலா முற்றம் ..
நிம்மதியான உறக்கம் ..
கனவுகளில் நீ ..
கவிதையுடன் நான் ..

வார்த்தைகள் பூரிப்படைகின்றன
உன்னால் ...
வா நாமிருவரும் பேசுவோம் கண்ணால்..

வாசலிலே வண்ண கோலமிட்டாய்
கோலங்களில் நானும் புள்ளியாய்
மாறி போனேன் ...
உன் பாத கொலுசுகளின் ஓசையில்
நான் பவனி வருகிறேன் பாதையில் ...

அருமை ...அருமை ..
என் கவிதை ..
மீண்டும் ..
நிலா முற்றம் ..
நிம்மதியான உறக்கம் ...மீண்டும்
தினம் தினம் கனவுகளில் ..
நீ ....

எழுதியவர் : சாருமதி (20-May-15, 4:09 pm)
Tanglish : kanavu pen
பார்வை : 305

மேலே