இதுதான் கலிகாலமா - உதயா

வருடம் தோறும் நாட்டில்
வறட்சி மட்டுமா அதிகரிக்கிறது
வன்பம் பொழியும்
வெட்கமில்லா கட்சிகளும்தான்

பலர் ஓயாமல் விண்மீனைப் போல
பொலிவாய் உழைத்திருந்தும்
பகலவனாய் கார்மிகிலாய் வேஷம் பூண்ட
முதலாளியின் சூய்ச்சியில்லல்லவா மறைக்கப்படுகின்றனர்

நேற்றிரவு செய்த கரிகுழம்புக்காக வாசலிலே
இரவு முழுவதும் காத்திருக்கும் நாயைப் போல
ஒற்றை நோட்டு தாளுக்காக நாள் முழுவதும்
சாலையோரமுள்ள கூட்டத்தில் காத்திருக்கின்றனர்

எவனோ ஒருவன்
பாணத்தைப் பருக
பல வண்ணப் பட்டையாய் ஊறிப்போகிறான்
பானையில் அடைக்கப்பட்ட தண்ணீரில்

கனிகள் இலவசமென்று அறிவித்தவுடன்
யாவரும் அந்த பெரிய கனிக்கே
முதலுரிமை அளிக்கின்றனர்
அது கசக்குமா இனிக்குமாயென அறியாமலே

கூரையில்லா மதிலுக்கிடையில் பலரும்
குருட்டு நம்பிக்கையிலே வாழ்கின்றனர்
இன்றிரவு நிச்சயம் மழை வராது
என்ற நம்பிக்கையிலே

ஒரு நாள் ஆசைக்காக
சாணக் காளானை உண்ணுவிட்டு
மாதக் கணக்கில் வாந்தியும்
பேதியுமாய் அவதிபடுகின்றனர்

அன்று கனிகளில்
வீசப்பட்ட நறுமணங்கள்
இன்று மரங்களை நாடியப்பின்னும்
எள்ளளவும் வாசம் காணவில்லை

மக்கள் நித்திரையில் ஆழ்ந்திருந்தால்
தர்மதேவன் நிச்சயம் எழுப்பியிருப்பான்
நித்திரை வேஷம் தரித்த மக்களை
அவனால் எவ்வாறு எழுப்ப இயலும்

பக்தனாய் இருந்திருந்தால்
கடவுள் கட்டாயம் காட்சியளித்திருப்பார்
நானே கடவுள் என்பவருக்கு
அவர் எவ்வாறு காட்சியளிப்பார்

அனைத்தும் அறிந்து அதனை அடக்க முயன்று
பலரும் என்போல் அடிப்பட்டு அந்த மூலையில்
குருடனுடன் இணைந்தே அமர்ந்துள்ளனர்
விடியாதா என்ற எண்ணத்தில் விடியலை நோக்கியே

எழுதியவர் : udayakumar (22-May-15, 6:21 pm)
பார்வை : 262

மேலே