ஆதலால் சிந்தியுங்கள்

நீயென்றால் நானென்கிறது கண்கள்!
வானென்றால் தானென்கிறது விண்மீன்கள்
கானகமென்றால் துள்ளும் மான்கள்!!

குளமென்றால் துள்ளும் மீன்கள்!
நிலமென்றால் உருகும் மனங்கள்
களமென்றால் எதிர்நிற்கும் உறவுகள்!!

பணமென்றால் வாய்திறக்கும் பிணங்கள்!
குணமென்றால் ஒருகணம் சிணுங்கும்
தானம் தந்தால் கால்தொட்டு வணங்கும்!!

எழுதியவர் : கனகரத்தினம் (25-May-15, 6:59 pm)
பார்வை : 73

மேலே