ஆதலால் சிந்தியுங்கள்
நீயென்றால் நானென்கிறது கண்கள்!
வானென்றால் தானென்கிறது விண்மீன்கள்
கானகமென்றால் துள்ளும் மான்கள்!!
குளமென்றால் துள்ளும் மீன்கள்!
நிலமென்றால் உருகும் மனங்கள்
களமென்றால் எதிர்நிற்கும் உறவுகள்!!
பணமென்றால் வாய்திறக்கும் பிணங்கள்!
குணமென்றால் ஒருகணம் சிணுங்கும்
தானம் தந்தால் கால்தொட்டு வணங்கும்!!