அவளுடன் ஆவலுடன் - முத்தக்கவிதை

அவளுடன் ஆவலுடன் - முத்தக்கவிதை
==================================
எப்படி இயல்கிறது உன் ஈரமருதாணிக்கு
நீர்விளிம்பில்
பொன் துளசி கதிர்ப்பட்டதுபோல்
சிவந்த கறைகளை
மேனிமுழுதும் அப்பிவிட
காற்று தட்டி
சிற்றலை எழுப்பிய
குளியலறை வாளி நீரில்
பிறழாய்ப்பதிந்த
பிறைநிலாமுகப் பிரதிமத்தை
குடுவையில் அள்ளி
இரைக்கும் எல்லாமுறையும்
மூச்சுத் திணறி
கிலுக்கமாய் சுற்றித்திரிகிறது எண்ணம்
என் நினைவில் பூத்து
குலுங்கித்ததும்பும்
காழ்வைமலர்ப்போன்ற
அவளின்
வளையா சிரிப்பொலியின் பின்னால்
"இருள் மறைவில் முகம்பதித்து
கட்டித் தழுவியபோதுதான்
அவள் உயரம் அவ்வளவே
என்பதிலுள்ள அதிருப்தி குறைந்தது
குனிந்த என் நுதலில்
அவள் பதித்த
முதல் முத்தத்தின்போது கேட்டேன்
இனி எத்தனை முத்தம்
பாக்கி இருக்கிறது என்று
முறுவலித்துக்கொண்டே விரிந்த
கன்னக்குழியில்
புதுமொட்டு மலர்ந்ததுபோல
அதோ அந்த
நட்சத்திரங்களை
எண்ணி முடியும்வரை என்றாள்"
அனுசரன்