நினைப்பதும் தொல்லை, மறப்பதும் தொல்லை
உதறிக் கொண்டு ஓடும்
உன்னை சுமக்கும்
என் நினைவுகள் கொடுமை
கண் மூடிய பிறகும்
காட்டிக் கொடுக்கும் கனவுகள்
அதை விட கொடுமை
நான் நிற்பதற்கும்,
நிலைப்பதற்கும்
நீ இல்லாத இடம் வேண்டும்.
தோள் சாயவும்,
மடி தூங்கவும்
உன் சாயல்லிலா முகம் வேண்டும்.