படர்ந்திடுவேன் நெஞ்சினில்

​எழில்மிகு எண்ணங்களை
--ஏற்றமிகு வடிவத்தில்
எவரும் புரியும்வண்ணம்
--எளிமையும் இனிமையும்
இரண்டும் கலந்திருக்கும்
--நயமிகு சொற்றொடரால்
கவின்மிகு கலையழகுடன்
--வாசிப்போரை கவர்ந்திடும்
--வடித்திடும் வரிகளுந்தான்
உம்நெஞ்சங்களில் தஞ்சமுற
--நும்நினைவுகளில் நிலைத்திட
அன்னைத்தமிழால் அறிந்ததை
--எழுதிடவே முயற்சிக்கிறேன்
தொட்டிடவும் முனைகின்றேன்
--தமிழர்களின் இதயங்களை
தொடர்ந்தும் எழுதிடுவேன்
--படர்ந்திடுவேன் நெஞ்சினில்
பழந்தமிழ் பெருமைதனை
--பாரினில் காத்திடுவேன் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (9-Jun-15, 11:14 am)
பார்வை : 102

மேலே