அவளுக்கு நான் எதற்கு

என்னவள் ...
என்னை நினைத்து ...
வருந்தி வருந்தி
ஏதேனும் அவளுக்கு ...
நடந்துவிட்டால் ....?

அவளுக்கு நான் எதற்கு ..?
என் அன்பு எதற்கு ...?
உடலோடு கலப்பு எதற்கு ...?
அத்தனையும் பூச்சியமாகி ....
விடுமே என் மனமே ....!!!
+
குறள் 1270
+
அவர்வயின்விதும்பல்
+
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 190

எழுதியவர் : கே இனியவன் (11-Jun-15, 10:57 am)
பார்வை : 102

மேலே