பயணத்தில் பறவை

காட்டை வெட்டி அழித்துவிட்டார்
காண வில்லை மழையினையும்,
நாட்டி லுள்ள நீரையெல்லாம்
நச்சு நீராய் மாற்றிவிட்டார்,
கூட்டைக் கட்ட இடமுமில்லை
குடும்பம் நடத்த வழியுமில்லை,
நாட்டை விட்டே செல்லுகின்றேன்
நல்ல வாழ்வைத் தேடிடவே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Jun-15, 6:40 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 83

மேலே