இயற்கை அழிவு

மனிதம் மலர வேண்டும் , மலர வேண்டும் எனக்கூறித்
திரியும் மடையர்களே
மண்ணின் வளத்தை அழித்து , அதிலெப்படி மலரும்
மனிதம்
செயற்கை உரமிட்டால் மரம் வளரும் என்று கூறும்
மூடர்களே
அந்தச் செயற்கை உரத்தினால் தானே கெடுகிறது
பயிர்களின் புனிதம்
பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துகின்ற
அறிவிலிகளே
அழிவது பூச்சிகள் மட்டுமல்ல , அணு அணுவாய்
நீங்களும் தான்
மரங்களை வெட்டி காடுகளை அழிக்கும் கள்வர்களே
நீ அழிப்பது காடுகளை அல்ல , உன் சந்ததின்
கனவை
இவையனைத்தையும் முன்னறிவின்றிச் செய்யும்
மாந்தர்களே
இயற்கை நம் நண்பன் நம் நண்பனை நாம் வதைப்பதை விட
வளர்ப்பதே நன்று !!!

எழுதியவர் : பீமன் (14-Jun-15, 11:18 am)
Tanglish : iyarkai alivu
பார்வை : 1788

மேலே