அஃது யாதென அதுவே சொல்லும்-4

அலைமக ளலைகிற
கடலதன் நடுவினில்
நடமெழி லுடன்புரி
சிறு ஓடம்!

*****

வனந்தனில் பெரும்புலி
குரங்குடன் குலவிட
பெருந்தவ மியற்றிடுங்
குண சீலர்!

*****

சிறுகொடி படரவும்
பெருரதம் நயந்தருள்
குணநிறை குலம்வளர்
தமிழ்க் கோமான்!

*****

மரகத நிறமொடு
விரிகட லுருகிட
விழிவிரி உருவுகொள்
மயிற்பீலி!

*****

பரியதன் முதுகினில்
படையதன் தலையென
பொலிவுடன் வலம்வரும்
பெரு வீரன்!

*****

மதியெனும் முகமுடன்
நதியென தவழ்ந்தரும்
மதுரமென் மொழியுதிர்
சிறு பிள்ளை...!

*****

பதமது வெழுந்ததிர்
மணற்துகள் பரவிட
மதமுறு மலையென
கரு வேழம்!


*************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (17-Jun-15, 12:05 pm)
பார்வை : 165

மேலே