பெண்ணின் குரல்

காதலன் ஒருவனை நம்பியதால்
கண்ணீரில் வாழ விட்டான் என்னை.
கண்ணி நானும் மனைவியாகவே
ஆசையுற்றேன் - இன்றோ
மணல் குழியை தேடிப் போகிறேன்!!


காதலன் மேல் பற்று கொண்டே
உறவையும் வெறுத்து விட்டேன் -பாவி, அவன் என்னை கற்பழித்தே
விட்டுவிட்டான்.
நானோ தீயிலே கருகிய
தேன்மலர் ஆனேன்,
நெருப்பிலே எரிந்த கவிதை ஆனேன்.!


ஊர் முழுதும் மாற்றி விட்டார்கள்
எந்தன் பெயரை வேசி என்றே!சில
பேர் விதவை என்று திருத்தி சொன்னார்!
மனத்திரையில் அடக்கி வைத்த
கண்ணீர் இன்று, இமைக் கதவை
உடைத்து விட்டே அணைகளானது!
பூங்கிளி பறந்த வந்த திசைகள்
இன்று புயலிலே மறைந்து
கல்லறை ஆனது!!

இறப்பை தவிற வேறு வழியில்லையே என்ற படி கல்லறை
நோக்கி நடந்திருந்தேன்.
நடுவில் குறுக்கிட்ட பூனை போல
வந்தான் ஒருவன் இன்று.

உந்தன் செய்தி கேட்டேன் மனம்
கலங்கியே உந்தன் முன் வந்து நின்றேன்.
மங்கையே நீ ஏன் அழுகிறாய்!!
பாவி அவன் செய்த தவறுக்கு
ஆண்மையைத் தான் அறுக்க
வேண்டும்!
உன்றன்பால் ஒன்று கேட்பேன் ஏற்பாயா என்றான்.
நானோ தலை குனிந்து நின்றிருந்தேன். அவன் சொல்லியதில் தலை நிமிந்தேன்!

மங்கையே! நான் உன்னை மணந்து
கொள்கிறேன் ஏற்ப்பாயா!
நல்வாழ்வு நான் தருகிறேன்!
என்றான்!
பதிலேதும் பேசாமல் சற்றே
அவன் முகம் பார்த்தேன்!
சோகத்தில் இருந்த என்னை ஆறுதல் சொல்ல வந்த குரல் என்றும் மறையாது என்றபடியே மணந்தேன்
அவனை!!

இன்றோ,!இரு குழந்தை உடன் வாழ்வு நன்றாய் தொடங்கியது எனக்கு

எழுதியவர் : இஜாஸ் (18-Jun-15, 9:45 am)
Tanglish : pennin kural
பார்வை : 284

மேலே