என் மடமையும், உன் அருமையும்
இயற்றிய கவிதைகள்
அனைத்தும் நண்பர்களிடத்தில்
பகிர்வதுண்டு,
உனக்கென ஓரு வரி
எழுதியதில்லை என்று
என் மனம் வாடியது இன்று.
இயற்றிய கவிதை வரிகளிடைய
இதுவரை உன்னை புகட்டாதது
என் மடமை,
யாதொரு வரியினை நான் இயற்றின்
அது, நீவீர் உரைத்த அறிவுத்துளியில்
அடங்கும் என்பது
உன் அருமை.
என் தந்தைக்கு சமர்ப்பணம்.