வாசிப்போம் சுவாசிப்போம்
வாசிப்போம்-சுவாசிப்போம்
# வாசிப்போம் நாம்
சுதந்திரக்
காற்றை
சுவாசிக்க
தன் சுவாசம் துளைத்து
நமக்கு சுவாசம் அளித்த
மாமனிதர்களின் வரலாற்றை!!!
வாசிப்போம் சாதிகள் இல்லையெனச் சொல்லி
சுதந்திர வேட்கைக்கு
எழுத்து அச்சாணி
ஏந்தி போராடிய மகாகவியின்
எழுச்சிமிகு புரட்சிக் கவியை!!!
வாசிப்போம் வாழ்க்கை வரைமுறையை இரு வரியில்
வரைந்த ஐயனின் திருமறையை!!!
மூத்திரச் சட்டி
ஏந்தி மூளை முடுக்கெங்கும்
மூட நம்பிக்கை
சாதி ஒளிப்பு என
போராடிய தந்தை
நாட்டில்
சாதி,மத,இன கலவரங்கள்
நடந்தேறும் இவ்வேளையில்
புரட்சி விதை யூன்றி
போராட
வாசிப்போம்
சேகுவாராவின் வாழ்க்கையை,
நெப்பொலியனின் வாழ்க்கையை...
ஊழல் அரசியல்
வேரூன்றி செழித்து வளர்ந்த
இச்செந்தமிழ் நாட்டை மீட்டெடுக்க
வாசிப்போம்
அலெக்சாண்டரின்
வாழ்க்கை வரலாற்றை
கண் கட்டி நடந்தேறும்
அத்துணை அநீதிகளுக்கும்
தராசு பிடித்து புரையோடிய
கண்களோடு
நீதியுரைக்கும் நீதி தேவதை
கண் திறந்து புரையகற்றி
சட்டம் நிலைநாட்ட
வாசிப்போம் சட்ட மேதை இயற்றிய
நூல்களை!!!
வாசிப்போம்
வாசித்த
வார்த்தைகளை
சுவாசிப்போம்...
நம்மை நெறிபடுத்தும்
வாசிப்பு...
நம்மை செம்மைபடுத்தும்
வாசிப்பு...
நம்மை முழுமையாக்கும்
வாசிப்பு...
சுவாசம் நின்றால்
மட்டுமல்ல
வாசிக்க மறந்தாலும்
மரணம் நிச்சயமென
உணர்...