இனிய நண்பா.

அன்றலர்ந்த மலர் என்னைப் பார்த்து

"உன்னுள் எத்தனை சுகந்தம்" என்றது.

அப்போது உதித்த ஆதவன் என்னைப் பார்த்து

"உன்னுள் எத்தனை ஒளி " என்றது.

அருகில் வந்த தென்றல் என்னைப் பார்த்து

"உன்னுள் எத்தனை உன்மத்தம் " என்றது.

உயரத்தில் இருந்து கொட்டிய அருவி என்னிடம்

"உன் உள்ளத்தின் ஊற்றே உவகை " என்றது.

வானில் நின்ற காற்று என்னைப் பார்த்து

"உன்னுள் எத்தனை உலகம்" என்றது.

செயற்கை இல்லா இயல்பினால் என்னை

இயற்கையும், "இனிய நண்பா" என்றது.

பாலு குருசுவாமி

எழுதியவர் : (13-May-11, 8:22 am)
சேர்த்தது : Baluguruswamy
Tanglish : iniya nanbaa
பார்வை : 345

மேலே