கடவுள்

மின்தடையால்
ஏசி நின்றுவிட
சித்திரை வெயிலின்
உக்கிரத்தாலும்
பட்டாடையும்
ஆபரணங்களும்
வாசனாதி திரவியங்களும்
சந்தனமும்
குங்குமமும்
விபூதியும் தந்த
கலவையான
கசகசப்புத் தன்மையாலும்
குருக்களின்
வார்த்தைகள் பிறழ்ந்த
அவசர காயத்ரி மந்திர
இரைச்சல்களாலும்,
கருவறை விட்டு
வேகமாக வெளியேறி
பிரகாரத்தில்
இறைந்திருந்த
வேப்பம்பூக்களைப்
பார்த்துக் கொண்டிருந்த
ஒரு குட்டிப்பாப்பாவின்
மழலையாக
மாறிப்போனார் கடவுள்
அக்கடா என்று

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (24-Jun-15, 8:50 pm)
Tanglish : kadavul
பார்வை : 291

மேலே