தலைப்புத் தந்தவர் கவிஞர் பாப்பனப்பட்டு முருகன் ஒரு கவிதை என்ன செய்யும் கவிஞர் இரா இரவி

தலைப்புத் தந்தவர் கவிஞர் பாப்பனப்பட்டு முருகன்

ஒரு கவிதை என்ன செய்யும்..? கவிஞர் இரா .இரவி

அநீதியை எதிர்க்கும்
நீதிக்கு குரல் தரும் !

அடிமைத்தனம் அகற்றும்
அன்பை போதிக்கும் !

அறியாமை இருள் அகற்றும்
அறிவை வளர்க்கும்

இயற்கை நேசிப்புத் தரும்
இசையை ரசிக்க வைக்கும்

இதயத்தை இதமாக்கும்
இலக்கிய ஆர்வம் பிறக்கும்

காதலை நேசிக்கும்
வெறுப்பை அகற்றும்

விழிப்புணர்வு விதைக்கும்
இலக்கியத தாகம் தணிக்கும்
.
சாதி மத வெறி நீக்கும்
சகோதர உணவு வளர்க்கும் !

மனிதநேயம் கற்பிக்கும்
மனதை கொள்ளையடிக்கும் !

மொழிப் பற்றை விதைக்கும்
விழி மொழி கற்பிக்கும் !

மிருக குணம் நீக்கும்
மனிதனை மனிதனாக்கும் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (27-Jun-15, 9:14 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 75

மேலே