சீதனம்

வீட்டின் வாசலில் காகம் கரைகிறது
விருந்தினர் வரப் போகிறார்களென
பாட்டி முணுமுணுக்க
கடன்காரியாகப் போகிறோமென
அம்மா தனக்குள் சொல்லிக் கொள்ள
வாசலில் ஆட்கள்
சீதனம் போதாதென்று போனவர்கள்
திரும்பவும் வந்திருக்கின்றார்கள்
விலை பேச...

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (27-Jun-15, 5:29 pm)
Tanglish : sithanam
பார்வை : 168

மேலே