என்னுள் நீ இருப்பதால்
![](https://eluthu.com/images/loading.gif)
மலரை நேசிக்கிறேன்
உன் கூந்தலில் குடிகொண்டிருப்பதால் !
இசையை நேசிக்கிறேன்
கொலுசுகள் உன் பாதங்களில் தவழ்வதால் !
வெட்கத்தை நேசிக்கிறேன்
உன் முகத்தில் பவனி வருவதால்!
கவிதையை நேசிக்கிறேன்
உன்னால் நான் கவிஞன் ஆனதால் !
என்னையே நேசிக்கிறேன்
என்னுள் "நீ" இருப்பதால் ...!