பொய் தவிர வேறொன்றும் இல்லை

பொய் தவிர வேறொன்றும் இல்லை

நான்
காதலைப் பற்றி
எழுதுவதெல்லாம் பொய்
பொய் தவிர வேறொன்றும் இல்லை
நம்பாதீர்கள் !
இதற்கு கவிதை மொழியில்
கற்பனை என்று பேர்
மனச் சாளரத்தை மட்டும்
திறந்து வையுங்கள்
தென்றலாய் வீசிச் செல்லும் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jul-15, 9:22 am)
பார்வை : 285

மேலே