ஜோரான ஜோக்ஸ்
"பரிமளம்! கத்திரிக்காய் வாங்கப் போன என் கணவர், லாரி மோதி இறந்துவிட்டார்..."
"ஐயோ, பிறகு..?"
"பிறகு என்ன? கையிலிருந்த முருங்கைக்காயை வைத்து சாம்பார் வைச்சேன்.."
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!
நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?
ஆசிரியர் : உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு
நண்பன் : நீங்க தானே தூங்க வெச்சிங்க. நீங்களே எழுப்புங்க.
வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...
சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.
வாத்தியார் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?
மாணவன் : அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானும் எழுந்து நின்றேன்.
முகநூல்