நாம் வாழும் உலகமடா இது

தாய் சேய்க்கு
தாய்ப்பால் கொடுப்பதை
காமத்துப்பாலில் காணும்
கயவர்கள் வாழும்
காலமடா(காலம்) இது!

மனிதர்கள் போர்வையில்
நம்பிக்கை துரோகிகளான
நயவஞ்சகர்கள்
வாழும் நாடடா (நாடு)இது!

ஏற்றிவிட்ட ஏணியை
எட்டி உதைக்கும்
மூடர்கள் வாழும்
பூமியடா(பூமி) இது!

அடித்துக் கொண்டிருப்பவனை
ஐயா சாமி என்றும்...
அடி வாங்கிக் கொண்டிருப்பவனை
போடா பைத்தியம்...
என்றும்!
புகழும்
உலகமடா(உலகம்) இது!

கையில் வைத்திருக்கும்
பணத்தை
தெரிந்து திருடுபவனை
திருடன்,கள்வன் என்றும்!
தெரியாமல்
திருடுபவனை
பள்ளி நிறுவனர் ,தாளாளர்
என்றும்!
அழைத்திடும்
கண்ணிய புவியடா(புவி) இது!

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (10-Jul-15, 10:33 pm)
பார்வை : 152

மேலே