தடாகத் தாமரை - 2

தண்டிலெழும் தாமரையின் தாதுதனை பங்கிடவே
வண்டுகளும் தண்ணொளியில் மன்றமிடும் – மன்றமிடும்
வண்டுகளும் நன்மதுரம் உண்பதற்குச் செங்கமலத்
தண்டுதரும் பந்தியது தாள்.


(தண்டின்மேல் மலர்ந்திருக்கும் தாமரையின் தேனை பகிர்ந்துண்ண,
வண்டுகள் குளிர்ந்த ஒளியில் கூட்டம்போடும். அவ்விதம் கூட்டம் போடுகின்ற வண்டுகள்,
தாம் சேர்க்கும் நல்ல தேனை உண்பதற்கு, தாமரைக்கொடியின் தண்டில் திகழும்
தாமரையிலை, பந்தியாய் விளங்கும்.)


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (15-Jul-15, 6:00 pm)
பார்வை : 150

மேலே