ஊர் உறங்கும் நேரம்

எப்பவும் போலவே இதுவும் ஒரு பின்னிரவு பொழுது தான்..

நாட்டை காக்கும் ஆயுதம் நெஞ்சில் தாங்கியபடி...

நான் இரவு பணியில் இருக்கும் போது எல்லாம் பெரும்பாலும் இரவு மட்டுமே துணைக்கு இருக்கும்...

தினமும் யாரிடமோ பேசிக் கொண்டு இருக்கும் காற்று
பொழுது போகவில்லை என்றால் என்னிடம் வரும் காதில் எதாவது ரகசியம் சொல்ல...

அதிசயமாய் சில நேரம் அந்த மஞ்சள் நிலா மேகத்தேரில் ஏறிவரும்..

கண்களில் ஒட்டி இருந்த தூக்கமும் எங்கோ பிய்ந்து விழுந்து விட்டது..

நானும்
இரவும்
நிலவும்
உறங்கவில்லை..

நான் உறங்கும் வரை ஒவ்வொரு இரவும் பகல்தானே...

இரவில் மாறுவேடம் போட்ட மரங்கள் பயமுறுத்தும் காற்றோடு சேர்ந்து..

தினமும் பார்த்தது தானே என்னிடம் தோற்று போகும்..

நெஞ்சில் காயம்பட ஆசை...

அப்போது
என் இடத்தில் என் சகோதரன் வருவான்..
நெஞ்சில் ஆயுதம் சுமந்து..

அவனுக்கு அறிமுகம் செய்துவிடுங்கள்
அந்த காற்றையும்..
மேகம்பின் மறையும் நிலவையும்..
பயமுறுத்தும்
அந்த மரத்தையும்...

நீங்கள் உறங்குவதற்காக..









_மஞ்சள் நிலா 🌙

எழுதியவர் : நாகராஜன் நாகா ஸ்ரீ (16-Jul-15, 7:15 pm)
Tanglish : oor urankum neram
பார்வை : 124

மேலே