நிலவின் அரங்கம்

செவ்விதழோரம் செந்தாமரை மலரும்
புன்னகை இதழ்களில் முத்துக்கள் குவியும்
கன்னக் குழிவினில் மாங்கனி சிரிக்கும்
கண்ணிமைகள் கவிந்தால் அந்தி அங்கே சாயும்
உன் முகம் நிலவு நடந்து வரும் அரங்கம்
நீ அழகு கொலுவிருக்கும் ஆலயம்
என் கவிதை உனக்கு ஆராதனை !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jul-15, 8:50 am)
Tanglish : nilavin arangam
பார்வை : 149

மேலே