அவளை ரசித்த விதம்

தேனிசையே!!மெல்லிசையே
உன் இதழும் ஒரு நல்லிசையே!!!
அதனை வாசிக்க வந்த
தனிக்காற்று நான்!!!!


நீள்வானே!! நீல வானே!!
உன் கண்ணும் ஒரு விண்மீனே!!
அதனை ரசிக்க வந்த
தனிநிலவு நான்!!!


காலை காற்றே!!மாலை மலரே!!
உன் மூச்சும் ஒரு வாடைக்காற்றே!!
அதனை ரசிக்க வந்த
தனி பருவம் நான்!!


ஓடுகின்ற நதியே!
ஒளிக்கின்ற அலையே!!
உன் பார்வை ஓர் குற்றால மழையே!!
அதனில் நனைய வந்த
தனி மேகம் நான்!!


வாழைத் தண்டே!!
முல்லை செண்டே!!!
உன் சப்தம் ஒரு முணுகும் வண்டே!
அதனுள் மூழ்க வந்த
தனி மௌனம் நான்!!


அல்லிப்பூவே!!
உன்னைஅள்ளிப் போகவே!!
உன் கன்னத்தை கிள்ளிப்போகவே!!
தனியாய் அமைந்த ஒரு
தனி பூங்கா நான்!!

இரவில் ஒளிரும்,பகலில் இருளும்
உன் கூந்தலும் ,நிலவும்
ஒன்றென்பதை காட்ட
வந்த தனி இருள் நான்!!

நீள பிரம்மிடே!!!
ஐந்தடி எய்ஃவில் டவரே!!
நீயோ சேலை கொண்ட தாஜ்மகாலே!!
இன்னும் அதிசயத்தில்
இடம் பெறாத தனி அதிசயம் நீ!!♥

எழுதியவர் : இஜாஸ் (17-Jul-15, 1:07 pm)
பார்வை : 151

மேலே