மறந்துவிட்டாயா _11

புல்லுக்கட்டு நிதம் சுமந்து
மல்லுக்கட்டும் உடலோடு
அல்லும் பகலுமுழைத்து
கல்வி பல நீபயில
வில்லாய் வளைந்த தாயவளை
மறந்துவிட்டாயா...?
---------------------------------------------------------------------
( ஓவியம் எனது மகள் ஹரிணி கிருத்திகா )

( மறந்துவிட்டாயா தொடர் கவியாக முதல் பத்தும் காதல் சார்ந்து எழுதினேன், தற்போது தாயின் உன்னதம் பற்றி எழுதலாம் என நினைத்துள்ளேன், இதுவரை ஆதரவு தந்த நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் )

நினைவுகள் மலரும்.....
## குமரேசன் கிருஷ்ணன் ##

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (22-Jul-15, 9:42 am)
பார்வை : 409

மேலே