மங்கை எண்ணிப் பூத்தாள்

காலை நேரத் தென்றல்
***கன்னம் கிள்ளிச் செல்ல
சோலைப் பூக்கள் வாசம்
***சோர்வு நீக்கும் மெல்ல
மேலை வானில் மேகம்
***வேக மாகப் போக
சாலை யோரப் பூங்கா
***சாந்தப் பார்வை பார்க்க

கோலைத் தட்ட மந்தி
***குட்டிக் கர்ணம் போட
ஓலைக் கீற்றில் கிள்ளை
***ஓசை யின்றி ஆட
ஆலைக் கன்னல் சாறாய்
***அன்னம் கொஞ்சிப் பேச
மாலை சூடும் நாளை
***மங்கை எண்ணிப் பூத்தாள் !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (23-Jul-15, 10:46 pm)
பார்வை : 99

மேலே