பாலாய் போகும் சமூகம்

ஒருவனுக்கு ஒருத்தி!!!!
ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்.......
காதல்- கண்ணதாசன்..........

இன்று - மேல்நாட்டு
நாகரிகம் என்று பலருடன்
ஆணும் பெண்ணும்.......

என் ஒரு மனம்
ஒருவனுக்குதான் - இல்லை
ஒருவளுக்குதான் - என்று
சொல்பவரும் இருக்கிறார்கள்
எண்ணிவிடும் அளவில்.................

மேல்நாடு
கொடுத்த போதனையோ என்னவோ!!!!!!!
மது கடையின் முன் மட்டும்
ஆணும் பெண்ணும் சமம்
ஏதும் அறியா குழந்தைக்கும்
மது கற்று கொடுக்கும் அவலம்.........
என் சமூகத்தில்!!!!!

படிக்கின்ற பள்ளிகள்
அதிகமில்லை....
குடிக்கின்ற கடைகள்
அதிகம் நம் தேசத்தில்......
பள்ளிகளை கவனிக்கா - அரசு
மதுக்கடை வருமானத்தில்..........

அதிகாரம் இருந்தும்
மாற்றம் பெறா - நம் பூமி
காரணம் ஊழல்.........

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (27-Jul-15, 11:05 am)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
பார்வை : 150

மேலே