எதிர்பாரா பயணம்

இன்று மட்டும் ஏன்
இத்தனை வலிகள்
இந்த மனதிற்கு.!

இன்று மட்டும் ஏன்
அழத்துடிக்கிறது
இந்த கண்கள்.!

முடிந்த பயணம் ஒன்று
பயணத்தின் வழியாக
நினைவுக்கு வந்தது ஏன்.?

மடியில் விளையாடிய
மழலை மனதில்
இடம்பிடித்தது ஏன்.?

அரைமணி நேரம் அமைதியாய்
தவமிருந்த நாவு அரை நிமிட
தவம் கலைத்ததால் பெற்ற
சாபம் தானோ 'அந்த பதில்'..!

இறங்கும் மழலையிடம்
ஆர்வமாய் உன் பெயர்
என்னவென்று கேட்டது.!!

எழுதியவர் : பார்த்திப மணி (27-Jul-15, 2:59 pm)
Tanglish : ethirpaaraa payanam
பார்வை : 414

மேலே