ஐயாஅப்துல் கலாம்

ஐயா!
அன்பு மனித நேசிகரே!
அழைத்தானோ காலன் உம்மையும்..

எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
எங்கோ உயர்ந்து –எங்கள்
இதயத்தில் நிறைந்தீரே!

உங்கள் கனவுகள் எங்கள்
உலகினில் நிஜமாகும் - அதையும்
எங்கள் சுவாசத்தில் கலந்த
உங்கள் சுவாசத்தின் மூலம்
உணர்ந்தே காண்பீரே!

நல் வித்துக்களை எங்கள்
இதயத்தில் விளைத்தீர்- அந்த
வித்துக்கள் எல்லாம் நல்ல
முத்துக்களாய் முளைக்கும்
நாளினை காண்பீரே!

இயன்றதை செய்தீர்- நமது
தேசம் வளர்ந்திட –நல்
வழிகளை சொன்னீர்-இந்த
நாடும் உயர்ந்திட!
உணர்பவர் உணர்ந்தால் – உமது
கனவும் கைகூடும்- அதையும்
விரைந்தே செய்தால் –நமது
பாரதம் செழித்திடுமே!

மனிதராய் நீங்களும்
முடிக்காத பணிகளை –எங்கள்
ஆவியில் கலந்தேனும்
அரங்கேற்ற வேண்டுகிறோம் ஐயா!

வாழ்க! நின் புகழ் – இந்த
வையகம் உள்ளமட்டும்!

எழுதியவர் : சோ.சுப்பிரமணி, குவைத். (28-Jul-15, 8:13 pm)
சேர்த்தது : சோசுப்பிரமணி
பார்வை : 84

மேலே