மரணம் வென்ற மனிதன் கலாம்

பொய்யுடல் விட்டு
புது உலகம் சென்றதேனோ...
விண் வேட்கையில்
மண் துறந்ததேனோ...
மரணம் தாண்டி
ஆராயும் அறிவியல்
ஆவலோ...


நெஞ்சம் அணுவென
பிளக்க
அக்னி சிறகென
வெடிக்க
வெம்புது மனம்
நீர் இல்லாத
வெறுமையை நொந்து...


மரணம் வென்ற
மனிதம் நீர்....
தேற்றிக் கொண்டது
மனம்...
மறுத்தது மடமை
விழியில் வழியும்
கண்ணீராக...


நாளை விடியுமென
நம்பிக்கையில்
கண்கள் மிளிர
கனவுகள் காணும்
கடைகோடி இந்தியன்
உள்ளவரை...
நீர்
மிருத்தியுஞ்சயர் அல்லவா

எழுதியவர் : Monisha (28-Jul-15, 9:55 pm)
பார்வை : 77

மேலே